மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை; தேர்வு கிடையாது, மாதம் ரூ.62,000 சம்பளம்!

 
1

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உள்ளமைப்பு பணியாளர்களில் 21% பெண்களும், வெளி ஒப்பந்தத் பணியாளர்களில் 50% பெண்களும் பணியாற்றி வருகின்றனர். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கையரையும் பணியமர்த்தியுள்ளது. 2-வது கட்டத்தில் முழுமையாக பெண்களால் மட்டுமே இயக்கப்படும் மெட்ரோ இரயில் நிலையங்களை நிறுவுவதற்கான வாய்ப்புகளையும் தீவிரமாக ஆராய்ந்துவருகிறது.

உதவி மேலாளர் (சிவில்)  -  8  

வயது வரம்பு
இப்பணியிடத்திற்கு வயது வரம்பு 08.01.2025 தேதியின்படி, அதிகபடியாக 30ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 2 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது. மேலும், மாற்றத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித் தகுதி
இப்பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் சிவில் பாடப்பிரிவில் B. E / B. Tech முடித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் அனுபவம் தேவை.

சம்பள விவரம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்படும் உதவி மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.62,000 தொகுப்பூதியமாக அளிக்கப்படும். இவை தவிர, விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் இதர செலவினங்கள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் இரண்டு கட்ட முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதலில் நேர்காணல் நடத்தப்படும். நேர்கானலில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் https://chennaimetrorail.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.50 செலுத்தினால் போதும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்    10.02.2025