இப்படி கூட மரணம் வருமா ? சிக்கன் கிரேவியை சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு..!
மதுரையை சேர்ந்த இளைஞர் ஆனந்த்ராஜ் உணவகத்தில் இருந்து வாங்கி வந்த சிக்கன் கிரேவியை சுட வைத்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட இளைஞர் ஆனந்த்ராஜ்-க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
ஆனந்த்ராஜ் மனைவி சௌமியா மற்றும் தனது 7-வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். ஆனந்த்ராஜ் வீட்டிலேயே டிரேடிங் மார்க்கெட்டிங் பணி செய்துவருகிறார். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி இரவு மேலப்பனங்காடி பகுதியில் உள்ள உணவகத்தில் ஆனந்தராஜின் தந்தை செட்டிநாடு சிக்கன் கிரேவி வாங்கி வந்துள்ளார்.
இதனை இரவு ஆனந்தராஜ் மற்றும் அவரது குழந்தையும் சாப்பிட்டுவிட்டு மறுநாள் காலையில் மீதம் இருந்த அதே சிக்கன் கிரேவியை சூடு செய்து ஆனந்த்ராஜ் சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் ஆனந்த்ராஜ்க்கு வாந்தி வந்துள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது மாலை, ’மயக்கம் வருவது போல உள்ளதால் மருத்துவமனை செல்ல வேண்டும்” என கூறி சேரில் அமர்ந்துள்ளார். இதையடுத்து வாகனம் மூலமாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அப்போது, ஆனந்த்ராஜின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
உணவகத்தில் இரவு வாங்கிய செட்டிநாடு சிக்கனை அடுத்தநாள் காலையில் சாப்பிட்ட சிறிதுநேரத்தில் சிக்கன் சாப்பிட இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து, சந்தேக மரணம் என்ற அடிப்படையில் கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.