காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது : ஆனாலும் இந்த மாவட்டங்களில் மழை பெய்யுமாம்!

 
ttn

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே முழுமையாக கரையை கடந்தது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் | Dinamalar Tamil News

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது சென்னை மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டதால்  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ,திருப்பத்தூர், வேலூர் ,ராணிப்பேட்டை ,கள்ளக்குறிச்சி ,விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் ,புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை கொட்டி தீர்த்தது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 11.9 சென்டிமீட்டர் மழையும்,  சோழவரத்தில் 10.4 சென்டி மீட்டர் மழையும் , திருத்தணியில் 9.8 சென்டி மீட்டர் மழையும் ஆவடியில் 9.4 சென்டி மீட்டர் மழையும் , பூண்டியில் 7.8 சென்டி மீட்டர் மழையும், தாமரை பக்கத்தில் 6.8 சென்டி மீட்டர் மழையும் , ஊத்துக்கோட்டையில் 7.3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்


இந்நிலையில் இரவு 1.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில், அதிகாலை 4 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே கடற்கரையைக் கடக்க தொடங்கியது முதல் சென்னையின் பல இடங்களில் பலத்த காற்று வீசியது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது.  வட மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை இருக்கும்  என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.