பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு இதுதான் காரணம் - மாவட்ட ஆட்சியர் பேட்டி!

 
collector

விருதுநகர் அருகே வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் உரிமம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஆப்பைய நாயக்கன்பட்டி பகுதியில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமாகின.  தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.  பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் இருந்த அறையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த அவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர், மேனேஜர் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்

இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடிப்புக்காண காரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுக்கு பேடி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, விருதுநகர் அருகே வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் உரிமம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. வெடி விபத்துக்கு தனி மனித தவறே காரணம். பட்டாசு ஆலை ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டதா என விசாரணை நடத்தப்படுகிறது என கூறினார்.