பெண்கள் வன்கொடுமை சட்டம் - எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

 
h

 பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகியவற்றின் கீழ் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.    இந்த வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி இருக்கிறார் எச்.ராஜா.

பாஜகவின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் எச். ராஜா கடந்த 2018ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது,  இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை,  அவர்களது குடும்பத்தினர் பற்றியும் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

k

 இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிகரன் சார்பில் விருதுநகர் பஜார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.   அவர் அளித்த புகாரின் பேரில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்,  பொய்யான தகவல்களை பரப்புவது,  அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது,  பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகியவற்றின் கீழ் எச். ராஜாவின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.   நீதிமன்றம் அனுப்பிய சம்மனை பெற்றுக்கொண்டு வழக்கு விசாரணையில் ஆஜராகாததால் நடுவர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி,  எச். ராஜாவுக்கு அக்டோபர் 7ஆம் தேதியன்று பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார்.

மேலும், ராஜா கடந்த இருபத்தி ஏழாம் தேதி ஆஜராக உத்தரவிட்டு இருந்தார்.   இந்த நிலையில் கடந்த இருபத்தி ஏழாம் தேதி வழக்கு விசாரணைக்கு எதிராக ஆஜராகவில்லை .   நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எச் . ராஜா இன்று ஆஜரானார்.