விக்கிரவாண்டி சிறுமி உயிரிழப்புக்கு என்ன காரணம்? - மருத்துவர்கள் பரபரப்பு தகவல்!
தனியார் பள்ளியில் சிறுமி உயிரிழப்புக்கு என்ன காரணம்? என்பதை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சென்மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கழிவறைக்குச் சென்ற எல்கேஜி மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக அவரின் பெற்றோர் பழனிவேல், சந்தேக மரணம் என விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி காவல் நிலைய காவல்துறையினர் சந்தேகம் மரணம், பணியில் அஜாகரத்தையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ், மூவரையும் நள்ளிரவு 2 மணிக்கு கைது செய்தனர்.
இந்த நிலையில், சிறுமி உயிரிழப்புக்கு என்ன காரணம்? என்பதை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விக்கிரவாண்டி சிறுமி உயிரிழப்புக்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் வாய்மொழியாக தகவல் தெரிவித்துள்ளனர். நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் சிறுமி உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.