அஜித் கார் ரேசிங், விஜய் அரசியல் குறித்து நடிகர் வடிவேலு கொடுத்த பதில்!

 
வடிவேலு

ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என சொன்னேன், அது ஒன்னும் ஜாலியான மேட்டர் தான... வடிவேல் சொன்னதுனால எதுவும் தப்பில்லை, ஏழை பாழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கன்னு சொன்னேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை  ரெக்ரேஷன் கிளப் சார்பில் வருமானவரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, “வருமானவரித்துறை சார்பில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. நான்கு நாளுக்கு முன்பு எனக்கு பொங்கல் வந்தது போல உள்ளது. மக்களோடு மக்களாக சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற ஆசை  ப்பட்டேன் அது நடந்துவிட்டது அதனை, இங்கே சிறப்பாக கொண்டாடி விட்டேன்.  ஜல்லிக்கட்டு போட்டியை முடிந்தால் பார்க்க போவேன். மாடு பிடிக்கிற ஆள் நான் கிடையாது, மாடு பிடிப்பதை வேண்டுமென்றால் பார்க்கலாம்.

பொங்கலை முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு போக வேண்டும், நிறைய வேலை இருக்கிறது. மாடு எங்க வருது என யாருக்கு தெரியும்... இப்பெல்லாம் கண்ட்ரோல விடுகிறார்கள். அப்போது எல்லாம் மாடு விடும்போது பேசிக்கிட்டு இருப்போம், பின்னால குத்தி தூக்கிட்டு போயிடும்.. கண்ட்ரோல் இல்லாம இருந்துச்சு, இப்ப கண்ட்ரோல்ல போய்கிட்டு இருக்கு...  ஜல்லிக்கட்டு ரொம்ப சிறப்பாக பெரிய லெவல்ல போய்கிட்டு இருக்கு... போட்டியை  பார்க்க வேண்டிய சூழல் இருந்தால் போய் பார்ப்பேன், இல்லையென்றால் பொங்கலை சிறப்பாக முடித்துவிட்டு ஊரில் போய் மற்ற வேலை பார்க்க வேண்டும். அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். கேங்கர்ஸ் சுந்தர் சி படத்திலும்,  பகத் பாசிலோடு சேர்ந்து மாரிசன் படம் ஒன்று என இரண்டு படங்களும் ரெடியாக இருக்கிறது. அடுத்த பிரபுதேவாவும் நானும் சேர்ந்து ஒரு படம் பண்றோம்” என்றார்.

விஜய் சார் அரசியலுக்கு போய் விட்டார் அவர் இடத்தை நீங்கள் நிரப்பிவீர்களா? என்ற கேள்விக்கு, வேற ஏதாவது பேசுவோமா என்றார். அஜித் கார் விபத்து குறித்த கேள்விக்கும் வேற ஏதாவது பேசுவோமா... என்றார்.