புதிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு யுஜிசி செக்...!
புதிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு யுஜிசி பல்வேறு உத்தரவுகளை போட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இந்த கல்வி கொள்கை மாநில கல்வி கொள்கைக்கு எதிராக உள்ளதாக கூறி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு புதிய கல்வி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம் என கூறி வருகிறது. இருப்பினும் புதிய கல்வி கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், புதிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு யுஜிசி பல்வேறு உத்தரவுகளை போட்டுள்ளது. அதாவது, புதிய கல்வி கொள்கையை ஏற்காத பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும், ஆன்லைன் வழியிலான கல்வி திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.