"அச்சம் வேண்டாம், தமிழகக் கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்"- உதயநிதி ஸ்டாலின்

 
உதயநிதி ஸ்டாலின் பேட்டி

தமிழ்நாட்டு வீராங்கனைகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  கூறியுள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “யாரும் அச்சம் கொள்ளவோ, வதந்தி பரப்பவோ வேண்டாம், தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர். பஞ்சாப் அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் புள்ளிகள் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இனி வெளி மாநிலம் செல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். 

தகவல் அறிந்ததும் உடனடியாக அங்குள்ள மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்தோம். இன்றைக்கே அவர்களை டெல்லி அழைத்துச் சென்று, அங்குள்ள தமிழ்நாடு ஹவுஸில் தங்கவைக்கப்பட்டு, உரிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்” எனக் கூறினார்.