தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் அண்ணாமலை சந்திப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.