திருப்பூர் குமரனின் அர்ப்பணிப்பையும்,துணிவையும் ஒவ்வொரு நாளும் வணங்குவோம் - தினகரன் ட்வீட்
திருப்பூர் குமரனின் அர்ப்பணிப்பையும்,துணிவையும் ஒவ்வொரு நாளும் வணங்குவோம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் பிறந்தநாள் இன்று. இவர் இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். 1904 ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் திருப்பூர் குமரன் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. அன்றைய காலகட்டத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றார். அப்போது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜனவரி 11இல் உயிரிழந்தார். இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
அண்ணல் காந்தியடிகள் காட்டிய அகிம்சை வழியில் அறப்போராட்டம் நடத்தி கையிலேந்திய கொடிக்காக தன் இன்னுயிரை ஈந்த தியாகி, கொடி காத்த திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு தினம் இன்று! (1/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 11, 2023
அண்ணல் காந்தியடிகள் காட்டிய அகிம்சை வழியில் அறப்போராட்டம் நடத்தி கையிலேந்திய கொடிக்காக தன் இன்னுயிரை ஈந்த தியாகி, கொடி காத்த திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு தினம் இன்று! (1/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 11, 2023
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அண்ணல் காந்தியடிகள் காட்டிய அகிம்சை வழியில் அறப்போராட்டம் நடத்தி கையிலேந்திய கொடிக்காக தன் இன்னுயிரை ஈந்த தியாகி, கொடி காத்த திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு தினம் இன்று! உயிரை விட கொண்ட கொள்கையும், தாய்மண்ணின் சுதந்திரமுமே பெரிது என நாட்டின் விடுதலைக்காக தன் இன்னுயிரைத் தந்த அந்த தியாகியின் ஒப்பிட முடியா அர்ப்பணிப்பையும், துணிவையும் ஒவ்வொரு நாளும் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.