ஆலங்குளத்தில் துரித உணவகத்தில் நூடுல்ஸ் சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு!

 
“நூடுல்ஸ் சாப்பிட்ட 9 பேர் மரணம்”: அதிர்ச்சி சம்பவம்! “நூடுல்ஸ் சாப்பிட்ட 9 பேர் மரணம்”: அதிர்ச்சி சம்பவம்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் துரித உணவுக் கடையில் ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் உள்ள துரித உணவுக்கடையில் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதி மக்கள் ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் வாங்கிச் சென்று சாப்பிட்டு உள்ளனர். அதன் பின்னர் காலையில் வயிறு உபாதை காரணமாக அவதிப்பட்ட நிலையில், ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் தற்போது 10-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்த நிலையில் சுகாதாரத் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் துரித உணவகத்தை ஆய்வு செய்து அங்கு சீல் வைத்த நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துரித உணவகத்தில் உணவு வாங்கி உட்கொண்ட 10-க்கும் மேற்பட்டோர் தற்போது அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.