மூதாட்டி உடலை மயானம் வரை தூக்கிச்சென்று இறுதிச்சடங்கு செய்த பெண்கள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த மூதாட்டியின் உடலை மயானத்திற்கு தூக்கிச் சென்ற பெண்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டியை சேர்ந்த வக்கீல் விஷ்ணுகுமார். இவரது பெரியம்மா இந்திராணி (வயது 83). வயது மூப்பின் காரணமாக இவர் கடந்த ஐந்தாம் தேதி இறந்தார். இதையடுத்து இவருடைய உடலுக்கு திராவிடக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் அஞ்சலி செலுத்தியதோடு இறுதிச்சடங்குகளுக்காக மூதாட்டியின் உடலை மின் மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்காக தயாராகினர்.
பின்னர் திராவிட கழகத்தைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் மூதாட்டி உடலை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸில் இரண்டு கிலோ மட்டர் தொலைவில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் மின் மயானத்தில் இருந்து மூதாட்டி உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து எரியூட்டும் மையம் வரை எடுத்துச் சென்று பின் மயானத்தில் உடலை வைத்து எரியூட்டினர்.
வழக்கமாக மின் மயானத்திற்கு ஆண்கள் மட்டும் அதிக அளவில் சென்று இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளை செய்வார்கள். ஆனால் உயிரிழந்த மூதாட்டின் உடலை வீட்டிலிருந்து மின் மயானம் வரை கொண்டு சென்று இறுதி சடங்குகளை செய்து மேன்மையானதில் இறையூட்டும் வரை காத்திருந்து நாங்கள் செய்யும் நடைமுறை வழக்கத்தை மாற்றி உள்ளனர்.