8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்! அரசுப் பள்ளியில் நடந்த அதிர்ச்சி

 
rape

சாத்தூர் அருகே எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

rape

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பனையடிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் பனையடிபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் இந்த பள்ளியில் சாத்தூர் அருகே உள்ள சடையம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டியன் கடந்த 12 ஆண்டுகளாக 8-ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் அவருடைய வகுப்பில் படிக்கும் தன்னுடைய மாணவியின் அம்மா செல்போனுக்கு ஆபாச வீடியோ மற்றும் போட்டோவை அனுப்பி அந்த மாணவிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த மாணவியின் அம்மாவின் செல்போனை உறவினர் ஒருவர் பார்த்த போது அதில் நிறைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது குறித்து கேட்ட நிலையில் தன்னுடைய செல்போனை மகள்தான் அதிக அளவில் பயன்படுத்துகிறார் என்று கூறியதாகவும் பின்னர் அந்த மாணவியிடம் அந்த வீடியோ மற்றும் ஆபாச படம் குறித்து கேட்டதற்கு அந்த மாணவி தன்னுடைய வகுப்பு ஆசிரியர் நீண்ட நாட்களாக ஆபாச வீடியோ மற்றும் ஆபாச புகைப்படங்களை அனுப்பி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறியதாக கூறப்படுகிறது.அந்த மாணவி கூறியதை அடுத்து ஆசிரியர் தங்கபாண்டியன் மீது மாணவியின் அம்மா சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.மேலும் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சாத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் புகாரில் உண்மைத் தன்மை இருந்ததை அடுத்து ஆசிரியர் தங்கபாண்டியினை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.