நாளை அதிகாலை 3-6 வரை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்

 
storm

புதுச்சேரி- சென்னை இடையே நாளை காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலசந்திரன், “சென்னைக்கு 100 கி.மீ, புதுச்சேரிக்கு 120 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கன முதல் கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விலக்கப்பட்டு, ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உள் மாவட்டம் இதர மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும். தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் ஆகிய இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது 40- 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையில் நாளை அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை கரையைக் கடக்கும். ” எனக் கூறினார்.