பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் செய்த கொடூரம்!

 
rape

போடியில் 16 வயது பள்ளி மாணவியை காதலித்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று இரண்டு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்

காதலிப்பதாக கூறி சிறுமி கடத்தல்... 2 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது...

போடி ஜீவா நகரைச் சேர்ந்தவர் சலவைத் தொழில் செய்பவரின் மகள் போடியில் உள்ள தனியார் பள்ளியில்  11ஆம் வகுப்பு படித்துவருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை  பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக  மாணவியின் தந்தை போடி நகர் காவல் நிலையத்தில் தன் மகளை காணவில்லை என புகார் செய்தார். புகாரின் அடிப்படையில்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன  பெண்ணை தேடி வந்தனர் 

இந்நிலையில் போடி சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் குழுமணி அந்த மாணவியை காதலிப்பதாக காதலிப்பதாக நாடகமாடி திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச்சென்று யாருக்கும் தெரியாத இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து ஐந்துக்கு மேற்பட்ட முறையில் பாலியல் வன்கொடுமை செய்து வந்த நிலையில், இவரது நண்பன் புதூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ரமேஷ் என்பவரையும் அழைத்து பாலியல் வன்கொடுமை செய்யவைத்துள்ளார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

அங்கிருந்து தப்பி ஓடி வந்த அந்த மாணவி, போடி நகர் காவல் நிலையத்தில் குழுமணி மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். இருவரையும் கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்