கோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

 

கோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.கே.சேகர்பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

கோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை, மானியக்கோரிக்கை என 120 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அடுத்த மாநில கோரிக்கை வருவதற்குள்ளாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அறிவிப்புகளில் 50 சதவிகிதத்தை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

கோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

மேலும், தற்போது அறிவிக்கப்பட்டதில் மொட்டைக்கு கட்டணம் இல்லை உள்ளிட்ட ஐந்து திட்டங்கள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன என்று தெரிவித்தவர், கோயில் இடங்கள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் லயோலா கல்லூரி அமைந்திருக்கும் இடம் எந்த திருக்கோயிலுக்கும் சொந்தமானது இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. ஆனால் கிஷ்கிந்தா இடம் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் மூலம் உருவான நிலம். கிஸ்கிந்தா அமைந்துள்ள 170 ஏக்கர் நிலமும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் தான் . இன்னும் ஒரு வாரத்தில் வல்லுநர்களிடம் ஆலோசித்து சட்டப்போராட்டம் நடத்தி அது கோவில் நிலம் என்று உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

இந்த ஆண்டிற்குள் 500 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு , பயன்பாடு இல்லாத திருக்கோவில் நகைகளை ஒன்றிய அரசின் ஒப்புதலோடு தங்க பிஸ்கட்கள் ஆக மாற்றி, வைப்பு நிதியில் வைக்கப்பட்டு வைக்கப்படும். அதன் மூலம் கிடைக்கின்ற வட்டித் தொகையில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.