சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

 
stalin

திருட்டு கும்பலால் கொலை செய்யப்பட்ட  சிறப்பு உதவி ஆய்வாளர்  பூமிநாதன்  குடும்பத்திற்கு  ரூபாய் ஒரு கோடி  நிதி உதவி அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

stalin

இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவர்கள் இன்று அதிகாலை நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூலாங்குடி காலனியில் இரவு ரோந்து பணியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு திருடர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பிடித்துள்ளார்.  இச்சம்பவத்தின் போது அந்த மர்ம நபர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி  சென்றுள்ளனர். இதுகுறித்து காவல் துறையின் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ssi

பூமிநாதன் சிறப்பு உதவி ஆய்வாளர் ரோந்து பணியில் இருக்கும் போது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று,  மிகுந்த துயரம் அடைந்தேன் . இக்கொடிய சம்பவத்தில் உயிரிழந்த பூமிநாதன் சிறப்பு உதவி ஆய்வாளர் , குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி நிதி உதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கவும் உத்தரவிட்டு உள்ளேன் என்று கூறியுள்ளார்.