தந்தை இல்லாமல் வாழ முடியவில்லை! மகனும், தாயும் தூக்கிட்டு தற்கொலை

 
Niranjan

திருப்பூரில் “தந்தை இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை , நாங்கள் வாழ முயற்சித்தோம் , ஆனால்.....” என கடிதம் எழுதி வைத்துவிட்டு, தாய் மற்றும் மகன் ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Letter

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி ராதா. இவர்களுக்கு நிரஞ்சன் என்ற மகன் உள்ளார். இவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக திருப்பூர் மாநகர் அனுப்பர்பாளையம் புதூர் பகுதிக்கு குடிபெயர்ந்து வசித்து வந்துள்ளனர். நிரஞ்சன் கோவையில் உள்ள தனியார் மென்பொருள் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். கொரோனா காலகட்டம் என்பதால் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகிறார். 

கடந்த ஆண்டு நாகராஜ் இதய பிரச்சனை காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் உயிரிழந்த நாள் முதலே ராதா மற்றும் நிரஞ்சன் ஆகிய இருவரும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆறுதலால் மன உளைச்சலோடு வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் , நிரஞ்சனின் நண்பர் இவர் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் கதவை தட்டியுள்ளார். கதவை திறக்காததால்  உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராதா மற்றும் நிரஞ்சன் ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற அனுப்பர்பாளையம் போலீசார், இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.