தீபாவளிக்கு பிறகே முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் திறக்கப்படும்- சேகர்பாபு

 
சேகர்பாபு சேகர்பாபு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைய உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

முருகன் மாநாடு வெற்றி-'அமைச்சர் சேகர்பாபு பேட்டி | nakkheeran

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே 16-ஏக்கர் பரப்பளவில் 15.20 கோடி மதிப்பீட்டில் காலநிலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அறுன்ராஜ், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன்  வண்டலூர் வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். இந்த பூங்காவில், ஏராளமான தாவரங்கள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள், பார்க்கிங் வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “கால நிலை குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில்  பல்வேறு செடிகள், செயற்கை காடுகள், மழைநீர் தேக்கம் குளம், சிறுவர் பூங்கா போன்றவற்றுடன் அமைக்கபடும். இப்பூங்காவை இன்னும் ஒரு மாதத்திற்குள் முதல்வர் துவக்கி வைப்பார். அன்றைய தினமே முடிச்சூரில் அனைத்து வசதிகளுடன் 150 பேருந்துகள் நிறுத்த கூடிய ஆம்னி பேருந்து நிலையத்தையும் முதல்வர் துவக்கி வைப்பார். அதேபோல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக 14 ஆயிரம் பேருந்துகள் இயக்கபட உள்ள நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுகாதாரம், குடிநீர், கழிவறைகள், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை அதிகபடுத்த உள்ளோம். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பது  குறித்து கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதற்காக அழுத்தம் கொடுத்து வருகிறோம். மேலும் அடுத்த மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலை உணவகம் மக்கள் பயண்பாட்டிற்கு வரும்” என உறுதியளிப்பதாக தெரிவித்தார்.