கனமழையால் 27 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...

 
rep image

வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 28 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் , 8 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், அரியலூர், விருதுநகர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்மழை எதிரொலியாக புதுச்சேரி,காரைக்கலில் இன்றும்,நாளையும் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.