சென்னையில் கனமழை : 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!!

 
rain

தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திர தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக இன்று கள்ளக்குறிச்சி, சேலம் ,நாமக்கல் ,ஈரோடு ,தர்மபுரி ,அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர் திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை .காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் .ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

நாளை சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் , ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

rain

நாளை மறுநாள் சென்னை, திருவள்ளூர் ,ராணிப்பேட்டை ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,   ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய கூடும் என்பதால்  ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் செங்கல்பட்டு ,திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல்  மிக கனமழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வருகிற 19ம் தேதி அரியலூர், பெரம்பலூர் ,திருச்சி, சேலம், விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கடலூர் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 20ஆம் தேதி திருவண்ணாமலை, வேலூர் ,ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்ய கூடும்.

rain
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். வங்க கடல் பகுதியை பொருத்தவரை இன்று தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் ஆகியவற்றில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும்,   இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசப்படும்.  நாளை மற்றும் நாளை மறுநாள் மத்திய மேற்கு தென்மேற்கு வங்கக்கடல் தெற்கு ஆந்திர மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும்,  இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பேசக்கூடும்.

rain

அரபிக்கடல் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று மத்திய கிழக்கு ,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் , கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே ,60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள  நிலையில் கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பரவலாக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று எர்ணாகுளம் ,திருச்சூர் ,இடுக்கி ,கோட்டயம்,  கோழிக்கோடு, காசர்கோடு , கண்ணூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.