பதவியேற்பு விழாவில் மயங்கிவிழுந்த மாஜி அதிமுக எம்எல்ஏ மாரடைப்பால் மரணம்!

 
அதிமுக எம்எல்ஏ மரணம்

புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தல் நவம்பர் 2ஆம்தேதி நடந்துமுடிந்தது.  அந்த வகையில் புதுச்சேரி மாநில வழக்கறிஞர் சங்கத்திற்கு, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல், நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு தனசேகரன், குமரன், பொதுச் செயலாளர் பதவிக்கு கதிர்வேல், நாராயண குமார் ஆகியோர் போட்டியிட்டனர். பொருளாளர் பதவிக்கு கார்த்திகேயன், லட்சுமி நாராயணன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரேஷில் இருந்தனர்.அதிமுக எம்எல்ஏ மரணம்

தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. மாலை 6 மணிக்கே வாக்கு எண்ணிக்க துவங்கியது. மறுநாள் வரை தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த வகையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று நீதிமன்ற வளாகத்தில் சங்க அறையில் நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் எம்எல்ஏவுமான பரசுராமன் பங்கேற்றிருந்தார். 

புதுச்சேரி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா - முன்னாள் எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்

விழா நடந்துகொண்டிருந்தபோதே திடீரென பரசுராமன் மயங்கி விழுந்தார். அங்கிருந்த நிர்வாகிகள் பரசுராமனை உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. காலமான பரசுராமன் 1991ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை உருளையன்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர். தற்போது கிழக்கு மாநில அதிமுக அவைத் தலைவராக இருந்தார்.