விஜயகாந்த் நினைவு நாள் பேரணிக்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு - பிரேமலதா பேட்டி!
விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் பேரணியில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு 28ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் வருகிற 28ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில்,
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் பேரணியில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சியினருக்கும் நேரில் அழைப்பு வழங்க உள்ளோம் என கூறினார்.