இது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்...ஓபிஎஸ் ஆவேசம்!

 
ops

அறப்போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் மக்கள் விரோத தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது. அதிக அதிகாரம் அளவு கடந்த போதையைத் தரும். அதிகாரத்தைக் கையாண்டு ஒரு முறை அனுபவப்பட்டு விட்டவர்கள், வெகு சுலபத்தில் அதனை கைவிடத் துணியார். என்றும் தன்னிடத்திலேயே அதிகாரம் சிரஞ்சீவியாக நிலைத்திருக்கப் பார்த்துக் கொள்வதில் மிக்க கவலை எடுத்துக் கொள்வர். மக்களாட்சி முறைக்கு இது முற்றிலும் புறம்பானது" என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அண்ணா வழியில் ஆட்சித் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, அவருடைய கருத்துகளுக்கு முரணான வழியில், மக்களாட்சிக்கு புறம்பாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ops

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் அறப் போரட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மதுரையில் இருந்து சென்னைக்கு நீதி கேட்டு பேரணி மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு, மாநில மகளிர் அணித் தலைவி திருமதி உமாரதி மற்றும் நிர்வாகிகள் மதுரை, சிம்மக்கல், செல்லத்தம்மன் கோவில் அருகே பேரணி செல்ல திரண்டபோது, அவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.