முல்லைப் பெரியாறு நீர்மட்டம் உயர்வு - 2ம் கட்ட எச்சரிக்கை!!

 
mullai

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக அணைகள், ஏரிகள், ஆறுகள் ஆகியவை நிரம்பிக் காணப்படுகின்றன. இதனால்  வெள்ள அபாயம் ஏற்படாத வகையில் கரையோரம் வாழும் மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு ,அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Coastal-residents-have-been-warned-that-the-water-level-of-the-Mullai-Periyar-Dam-has-risen-to-141-feet

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை 141 அடியை எட்டியுள்ளது. 152 அடி கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நீர்மட்டம் தற்போது 141 அடியை தொட்டு உள்ளதால் அணைக்கு நீர்வரத்து 3340 கன அடியாக உள்ளது . இதன் காரணமாக  வண்டிப்பெரியாறு ,சப்பாத்து, உப்பு தரை உள்ளிட்ட நீரோட்ட பாதைகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை 142  அடியை எட்டினால் அணையில் இருந்து 13 மதகுகள் வழியாக கேரளாவிற்கு உபரி நீர் திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக கடந்த மாதம்  அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டிய போது, "ரூல் கர்வ்' முறைப்படி கேரளாவிற்குள் உபரி நீர் திறந்து விடப்பட்டதை போல, இந்த முறையும், நவம்பர் 30ம் தேதி அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்பது கவனிக்கத்தக்கது