கோயில் குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் பலி- பெற்றோருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

 
mkstalin mkstalin

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமம், மகாத்மா காந்தி நகரில் உள்ள பொன்னியம்மன் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

mkstalin

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமம், மகாத்மா காந்தி நகர், பொன்னியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் திரு.தமீம் அன்சாரி (எ) தமிழரசு மற்றும் அவரது மனைவி திருமதி.வசந்தா ஆகிய இருவரும் நேற்று (01.11.2025 நண்பகல் 12.00 மணியளவில் பணி நிமித்தம் காரணமாக தங்களது இரண்டு குழந்தைகள் செல்வன்.ரியாஸ் (வயது 5) மற்றும் செல்வன்.ரிஸ்வான் (வயது 3) ஆகிய இருவரையும் வீட்டில் விட்டு வெளியில் சென்ற நிலையில் மேற்படி குழந்தைகள் இருவரும் அருகிலுள்ள பொன்னியம்மன் கோயில் குளத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.