உள்ளாட்சித் தேர்தல் எப்போது?- கே.என்.நேரு விளக்கம்

 
KN Nerhu KN Nerhu

வடகிழக்கு பருவமழை காலத்தில் எந்த நிலையையும் எதிர்கொள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

kn nehru

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தமிழ்நாடு அரசு தரம் உயர்த்திய நிலையில் இன்று புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயர் துணை மேயர் உறுப்பினர்கள் பதவி ஏற்பு மற்றும் முதல் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு. “வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து துறை அதிகாரிகளை அழைத்து என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். எந்த பணிகள் தாமதமாக இருக்கிறது ஏன் தாமதம் எந்தெந்த பகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது என்று துணை முதலமைச்சர் கூட்டம் நடத்தியுள்ளார். 

தமிழ்நாடு முழுவதும் அத்தனை நகர பகுதிகளிலும் வாய்க்கால்கள் தூர்வரப்பட்டு ஆகாயத்தாமரை அகற்றப்பட்டுள்ளது எந்த நிலையையும் எதிர்கொள்ள மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. அனைத்து வகை மக்களுக்கும் தங்க வைப்பதற்கும் மரம் விழுந்தால் அகற்றுவதற்கும் பல இடங்களில் உணவு தயாரித்து வழங்குவதற்கும் பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்கும் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மழைக்காலத்திற்கு நிதி என்று கேட்டால் தமிழ்நாடு அரசு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பார்கள்.உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முடிவெடுப்பார்.

எதிர்க்கட்சியினர் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் என்று என்றாவது சொல்வார்களா? நாங்கள் செயல்பட்டுள்ளமா இல்லையா என்பதை கண்காணிக்க ஆடிட் உள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி தமிழ்நாடு முதலமைச்சர் மூலம் இயக்கப்படும் துறைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை சராசரியாக இருந்தால் அப்போது என்ன தேவை என்று பார்த்து அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக எடுக்கப்பட்டுள்ளது. இயற்கையின் சீற்றம் அதிகமாக இருக்கும் போது ஒரே நேரத்தில் குறுகிய நேரத்தில் அதிகமான மழை பெய்யும் பொழுது சில நேரம் பணிகள் தாமதமாகும் அது இயற்கையை மீற முடியவில்லை. அந்த நேரத்தில் தான் பம்பு போன்றவற்றை வைத்து நீரை எடுப்பதற்கும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வரி உயர்வுக்கு ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டுள்ளது.  1200 சதுர அடிக்கு மேல் கட்டம் கட்டியவர்களுக்கு மட்டுமே 30 40 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. கீழ்த்தட்டு மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை, தேர்தல் வரப்போவதால் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு என்று 2600 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு முதலமைச்சர் கூறியதுபடி அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு நடைபெற்று 85 மதிப்பெண் பெற்றவர்கள் 7272 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் 2600 பேர் தேர்வு செய்து பணியமத்தப்பட உள்ளனர்”என்று தெரிவித்தார்.