ஊரக உள்ளாட்சி தேர்தல் – தினகரனின் முக்கிய அறிவிப்பு!!

 

ஊரக உள்ளாட்சி தேர்தல் – தினகரனின் முக்கிய அறிவிப்பு!!

உள்ளாட்சித் தேர்தல் பணிகளை உடனடியாக மேற்கொள்ள நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது வருவாய் மாவட்டங்களிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவி இடங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் – தினகரனின் முக்கிய அறிவிப்பு!!

இத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு பதவி இடங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட கழக மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்களை பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து திரும்ப அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் – தினகரனின் முக்கிய அறிவிப்பு!!

அந்தந்த கழக மாவட்டங்களில் உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர் உள்ளிட்டோர் கலந்து ஆலோசித்து வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட உள்ளாட்சித் தேர்தல் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான முழு விவரங்களையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.