சிறுமியை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு சாகும் வரை ஆயுள்

 
arrested

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த திருச்சி சமயபுரத்தை சேர்ந்த மாதவனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கடந்த கடந்த ஜூன் மாதம்  30-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த 27 வயதான மாதவன், அடித்து துன்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுதொடர்பான புகாரின்பேரில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை கைது செய்த கீரனூர் மகளிர் போலீசார், குற்றவாளி மீது போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர், இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றா நிலையில், விராலிமலையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் சிறை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளாது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசின் தரப்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற சம்பவம் நடைபெற்று 4 மாதங்களிலேயே புதுக்கோட்டை நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.