இன்னுயிர் காப்போம் திட்டம் : முதல் 48 மணி நேரத்திற்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சை இலவசம்!!

 
cm mk stalin

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கான முதல் 48  மணி நேர உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று சாலை பாதுகாப்பு குறித்தும்,  சாலை உயிரிழப்புகளை தடுப்பதற்கும் விபத்துகளை குறைப்பதற்கும், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ஒரு லட்சம் மக்கள் தொகையில் சாலை விபத்துகளில் இறப்பு விகிதம் 23.9 என்றிருப்பது குறைக்கப்பட வேண்டும் எனவும்,  சாலைப் பயணங்கள் பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பான ஒன்றாக அமைந்திடும் வகையிலும்,  சாலையில் உயிரிழப்புகளை தடுப்பதற்கும்,  விபத்துக்களை தவிர்ப்பதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.  இதன் அடிப்படையில் சாலை பொறியியல் , வாகன போக்குவரத்து, காவல்துறை, மருத்துவத்துறை மற்றும் பள்ளி, கல்லூரி கல்வித் துறைகளை இணைத்து கருத்துக்களின் அடிப்படையில் வரைவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ttn

அதனடிப்படையில் பல்துறை நிபுணர்கள் உள்ளடக்கிய சாலை பாதுகாப்பு ஆணையம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சாலை பாதுகாப்பு திட்டங்களையும், வழிமுறைகளையும் , நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி அதிகாரங்களுடன் உருவாக்கப்படும்.  சாலை பராமரிப்பு ஏற்படும் குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தீர்வு காணவும், சாலை பொறியியல் தொடர்பான இடைவெளிகளை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ,அறிவியல் பூர்வமாக அணுகி புதிய தொழில் நுட்பத்தோடு அதனை சரிசெய்து தொலைநோக்கு திட்டத்துடன் விபத்துகளைத் தவிர்ப்பதுமே இதன் முதன்மையான இலக்காகும் . 

stalin

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48  மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசு மேற்கொள்ளும் வகையில் நம்மை காக்கும் 48 அனைவருக்கும் முதல் 48  மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவி திட்டம் செயல்படுத்தப்படும்.  சாலை ஓரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் இதற்கென கண்டறியப்பட்டுள்ளன.

cm stalin

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லாதவர்களுக்கும் ,பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என இருக்கும் இந்த திட்டத்தின் கீழ் மருத்துவம் செய்யப்படும் உறுதியளிப்பு அடிப்படையில்,  செலவினங்கள் கணக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் வரம்புக்குள் என்பது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ முறைகள் செயல்படுத்தப்பட உள்ளன.  அடிப்படையில் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது.  12 மாத காலத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு அதற்குப் பிறகு வருடாந்திர செலவினம் மதிப்பாய்வு செய்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் நினைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவாக அணுகுதல் ,உயிர் மீட்பு சிகிச்சை நிலைப்படுத்துதல் ,பாதிப்பை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் ,இயல்பு வாழ்க்கையை மீட்டெடுத்தல் ,மறுவாழ்வு சிகிச்சை ஆகியவை இதன் வழிமுறையாகும்.  சாலை பாதுகாப்பு மக்கள் இயக்கமாக மாற பள்ளி,  கல்லூரி மாணவர்கள் மக்கள் பிரதிநிதிகள்,  உள்ளாட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள்,  விபத்தில் முதல் உதவி செய்யும் பொது மக்கள்,  அனைவருக்கும் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு உருவாகும் வகையில் இன்னுயிர் காப்போம் உதவிசெய் திட்டம் செயல்படும். சீராகும் சாலைகளும் நம்மை காக்கும் 48 மணி நேரமும் , அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டமும் ,  உதவி செய்வதுமே தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.