என்ன கொடுமை சார் இது? ‘தலைவர் வழியில் தொண்டர்’

 
என்ன கொடுமை சார் இது? ‘தலைவர் வழியில் தொண்டர்’

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தை கண்டித்து இன்று சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அண்ணாமலை அறிவித்தார். 

annamalai

திசைமாறிப் போன திமுக அரசின் கவனத்தை ஈர்க்கவும், குற்றவாளிகளை, கட்சி சார்பின்றி குற்றவாளிகளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று காவல்துறையை வலியுறுத்தியும், எனது இல்லத்தின் முன்பு, சாட்டையால் என்னை நானே அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதனையடுத்து கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். 

இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டதை தொலைக்காட்சியில் பார்த்து தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்ட காஞ்சிபுரம் பாஜக நிர்வாகி பிரபாகரனின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளன.