"தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன்"- கமல்ஹாசன்

 
கமல்

பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்துக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், “பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.  தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்..