இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்!!

 
rain

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை . இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராமநாதபுரம் ,திருநெல்வேலி, தூத்துக்குடி ,புதுக்கோட்டை ,நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என்பதால் இந்த மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கடலூர், அரியலூர் ,கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

rain

நாளை கன்னியாகுமரி ,திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.  அத்துடன் கடலூர், விழுப்புரம் ,செங்கல்பட்டு ,சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,மதுரை ,புதுக்கோட்டை, தேனி ,தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல்  மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர் ,செங்கல்பட்டு, திருவண்ணாமலை,கடலூர், விழுப்புரம், சேலம், நீலகிரி ,கோயம்புத்தூர், ஈரோடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்  பெய்யக்கூடும்.

rain

வருகிற 28ம் தேதி திருவள்ளூர் ,ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம். காஞ்சிபுரம் .செங்கல்பட்டு. கோயம்புத்தூர். திருநெல்வேலி. தூத்துக்குடி. டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

rain

வருகிற 29ம் தேதி தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,   ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை,  காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 
இதன்படி இன்று முதல் வருகின்ற 28ம் தேதி வரை தமிழகத்தில் ஆரஞ்சு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

rain

இன்று மற்றும் நாளை குமரிக்கடல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகள்,  நாளை மறுநாள் குமரிக்கடல் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  வரும் 29ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.  இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும் இதன் காரணமாக 29ம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  இதனால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.