தொடர் மழை : இந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

 
rain

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

rain

கடந்த 13ஆம் தேதி அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்தது.  இது நேற்று முன்தினம் சென்னைக்கும் - புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது.  தாழ்வு மண்டலத்தின் முக்கிய பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை கடந்தது. கரையை கடந்தும் தாழ்வு மண்டலம்,  தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து தெற்கு ஆந்திர மற்றும் தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது . இதனால் வருகின்ற 23ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

நேற்று சென்னை உள்ளிட்ட பல  மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த சூழலில் கனமழை காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் , திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை,  வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.