4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை!!

 

4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை!!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்கள் , டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ,திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை!!

நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மாவட்டங்கள், ஓரிரு உள்மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 18-ஆம் தேதி தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். வருகின்ற 19ஆம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் , கடலோர மாவட்டங்கள் , நீலகிரி ,கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை!!

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசில் ஒட்டியிருக்கும் . அடுத்த 48 மணி நேரத்தில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இன்று மற்றும் நாளை தென் மேற்கே அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.