"இந்தியாவின் முக்கிய பலமே சனாதன தர்மம்தான்"- ஆளுநர் ரவி

சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் "காசி கும்பாபிஷேகம்" என்னும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என் ரவி கலந்துகொண்டு "காசி கும்பாபிஷேகம்" என்னும் புத்தகத்தை வெளியிட்டார்.. இந்த நிகழ்ச்சியில் ஐஐடியின் இயக்குனர் காமகோடி, துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தியாவில் காசி பல ஆண்டுகளாக ஆன்மீக தளமாக விளங்குகிறது. 40000 தமிழக மக்கள் காசியில் வாழ்ந்து வருகின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் காசியிடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். பாரதம் ரிஷிகளால் உருவாக்கப்பட்ட போது சனாதன தர்மத்தை மட்டும் வழங்கவில்லை. காசி நமது பாரதத்தின் ஆன்மீக ஈர்ப்பு மையமாகும். இது நமது நாட்டின் பாரம்பரியம். இந்தியா நமது ரிஷிகளால் உருவாக்கப்பட்டது. மேலும் ரிஷிகள் சனாதன தர்மத்தை மட்டுமல்லாது நாடு முழுவதும் ஒரு கட்டமைப்பை உருவாக்கினார்கள். செல்வத்தை உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமை. துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகு நாம் திசையை இழந்தோம். பாரதத்தின் முக்கிய பலம் சனாதன தர்மத்தைத் தவிர வேறில்லை. பாரதத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு தேசியத் தலைவர் நமக்கு இருக்கிறார். சமூகத்திற்கு நடந்த தவறுகளை திருத்தி அவர் மீண்டும் பாரதத்தை மீட்டு கொண்டு வர முயற்சிக்கிறார். அந்தவகையில் இந்திய வரும் 2047ஆம் ஆண்டில் தன்னிறைவு பெரும் நாடாக மாறும்” என்றார்.