தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க ஆளுநர் ரவி ஒப்புதல்
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்ட மசோதா கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் நிறுவ தமிழக அரசு திட்டமிட்டது. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்ட மசோதா கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்தல், நீ்ண்டகால திட்டம் தயாரித்தல் ஆகியவை இந்த ஆணையத்தின் பணியாகும். ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழுநேரம், 3 பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தனியார் ஒத்துழைப்போடு திட்டங்களை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, மாநிலத்துக்கு தனி ஆணையத்தை அமைக்கும் மசோதா கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அம்மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.