தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை! கவலையில் இல்லத்தரசிகள்!

 
gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய் கிழமை தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.56,720க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.56,800க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்த நிலையில், தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 7,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 3வது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.