சமையல் எரிவாயு மானியத்தை உயர்த்த வேண்டும் - ராமதாஸ் ட்வீட்!!

 
Gas

சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் புதிய விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1015 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதன்மூலம் ஒரே ஆண்டில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 190 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.  விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் நேரத்தில் சிலிண்டர் விலை உயர்வால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். 

pmk

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், " சமையல் எரிவாயு விலை மீண்டும்  உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னையில் ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.1015.50 ஆக அதிகரித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலைகள்  தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இது கூடுதல் சுமையாகும். சமையல் எரிவாயு விலை கடந்த ஓராண்டில்  10 தவணைகளில் ரூ.305 உயர்த்தப் பட்டிருக்கிறது. இது 44% உயர்வு ஆகும்.  மிக மிக அத்தியாவசியப் பொருளான சமையல் எரிவாயு விலை ஒரே ஆண்டில் 44% உயர்த்தப்படுவதை ஏற்க முடியாது. 

ttn

இதை ஏழை, நடுத்தர மக்களால்  தாங்கிக் கொள்ள முடியாது! ஒரு காலத்தில் சமையல் எரிவாயு விலை 400 ரூபாயைத் தாண்டக் கூடாது என்பதற்காக மானியத் தொகை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. 2018-ஆம் ஆண்டு நவம்பரில் மானியத்தின் அளவு ரூ.435 என்ற உச்சத்தை தொட்டது.  ஆனால், இப்போது மானியம் ரூ.24.95 ஆக குறைக்கப்பட்டு விட்டது! ஒரு புறம் விலை அதிகரிக்கும் நிலையில், மறுபுறம் மானியம் குறைக்கப்படுவது இரட்டைத் தாக்குதலாக அமைந்து விடும். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு  சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்; மானியத்தின் அளவை படிப்படியாக உயர்த்த வேண்டும்!" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.