முட்டுக்காடு படகுக் குழாமில் திறக்கப்பட்டுள்ள மிதவை உணவகம்
முட்டுக்காடு படகு இல்லத்தில் 5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட மிதக்கும் உணவக கப்பலை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு படகு குழாமில் ஏற்கனவே வாட்டர் கூட்டர், ஸ்பிட் போட், கை படகு என சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது, மேலும் சுற்றுலாவாசிகளை கவரும் விதமாக தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் 5 கோடி ரூபாய் மதிப்பில், 125 அடி நீளம், 25 அடி அகலத்தில், முதல் அடுக்கு முழுவதும் குளிருட்ட்டப்பட்ட இரண்டு அடுக்கு மிதவை உணவக கப்பல் கொச்சியைச் சேர்ந்த 'கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் சார்பில், தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக இதற்கான கட்டுமானப்பணிகள் இந்த படகு குழாம் வளாகத்தில் நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது இதனை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு மிதவை உணவக கப்பலை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலஷ்மி மதுசூதனன், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன் உள்ளிட்ட நிர்வாகிகள் சுற்றுலாத்துறை அதிகாரிகள் அமர்ந்து படகில் உலாவந்தனர். மேலும் மேல் தளத்திற்கு அமைச்சர்கள் நிர்வாகிகள் சென்ற நிலையில் பலூன்களை பறக்கவிட்ட நிலையில் மிதக்கும் உணவு கப்பலில் மித வேகத்தில் நகர்ந்து சென்றபோது இயற்கை அழகை ரசித்தனர். குறிப்பாக நீர் நிலைகள், பறவைகள், மற்ற படகுகள் இயக்கம், சன் செட் உள்ளிட்ட காட்சிகளை ரசித்தனர்.