ஓசூர் அருகே யானை மிதித்து விவசாயி பலி!

 
death

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே வயலுக்கு காவலுக்கு சென்ற விவசாயி யானை மிதித்து பலியானர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தொட்டமஞ்சி ஊராட்சி கெம்பகரை கிராமத்தில் வசிப்பவர் மாதையன் மகன் கண்ணன்(46), இவர் நேற்று இரவு கிராமத்து அருகே கெம்பகரை வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ள விவசாய நிலத்திற்கு காவலுக்கு சென்றுள்ளார். 
 
இந்நிலையில் இன்று காலை வெகுநேரம் ஆகியும் கண்ணன் வீட்டிற்கு வரவில்லை. உறவினர்கள் கண்ணனை தேடி சென்ற போது வயலில் கண்ணணை யானை மிதித்து உடல் சிதறி இறந்து கிடந்தது தெரியவந்தது.  இது குறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த வனச்சரக அலுவலர் முருகேசன், வனவர் பிரகாஷ் மற்றும் அஞ்செட்டி போலீசார், இறந்து கிடந்த கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.