கதிர் ஆனந்த் கல்லூரியில் ED சோதனை நிறைவு

 
ச்

திமுக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கல்லூரியில்  44 மணி நேரம் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவு 2:35 மணிக்கு நிறைவு பெற்றது.

காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்திற்கு சொந்தமான (கிங்ஸ்டன்) பொறியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் (03.01.2025) முதல் இன்று (05.01.2025) நள்ளிரவு 02:30 மணிவரை மூன்றாவது நாளாக தொடர்ந்து 44 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை  நிறைவு. மொத்தம் எட்டு கார்களில் வந்திருந்த 18 அமலாக்கத்துறை அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டனர். 

ஏற்க்கனவே கடந்த 3- ம் தேதி இரவு SBI வங்கி வாகனத்தோடு துப்பாக்கி ஏந்திய காவலர்களோடு வங்கி ஊழியவர்கள் வரவழைக்கப்பட்டு இரவு 10 மணி அளவில் வெளியே சென்றுள்ளது. அதில் கணக்கில் வராதா ரொக்கப்பணம் பறிமுதல் செய்து எடுத்து சென்றதாகவும். அது அமலாக்கத்துறை கணக்கில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரி தொடர்பான முக்கிய ஆவணங்கள்,  கணிணியின் ஹார்ட் டிஸ்க்கள், வாங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்து எடுத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சோதனையின் போது கல்லூரியின் அனைத்து சிசிடிவி கேமிராக்காளையும் அமலாக்கத்துறையினர் காட்டுப்பாட்டில் வைத்து கண்காணித்ததாகவும் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் பணம் கல்லூரியில் இம்மாதம் ஊழியர்களுக்கு சம்பளம் போட இருந்ததாகவும், மாணவர்கள் பல்வேறு வகையில் செலுத்திய கட்டணம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் திமுக எம்.பி கதிர்ஆனந்தின் தந்தையும், அமைச்சர் மற்றும் திமுக பொதுச்செலாளருமான துரைமுருகன் இரவு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்ற சுமார் நான்கரை மணி நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்துக்கொண்டு கல்லூரியில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றனர்.