காவலர் கண் முன்னே தலித் இளைஞர் கழுத்தறுத்து கொலை- உறவினர்கள் போராட்டம்

 
s

பெரம்பலூர் அருகே  காணும் பொங்கலன்று ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள கைகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த இவர், அக்கிராமத்தை சேர்ந்த அருண் என்பவருக்கு சொந்தமான நெல். அறுவடை எந்திரத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே  கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் (உடையார்) என்பவரும் அதே இடத்தில் வேலை பார்த்து வந்துள்ள நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று   நடைபெற்ற  பொங்கல் விளையாட்டு போட்டியின்போது  இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, தேவேந்திரன் மீது மணிகண்டன் கை  களத்தூர்  காவல் நிலையத்தில் புகார் செய்திருந்ததாக தெரிகிறது. இதையடுத்து தேவேந்திரனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைந்து வந்த கை களத்தூர் காவல்நிலைய ஏட்டு ஸ்ரீதர் என்பவர்
மணிகண்டன் இருக்கும் இடத்திற்கு அவனை அழைத்து சென்று இருவருக்கும் இடையே சமாதானம் பேசிட முற்பட்டுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக தேவேந்திரன்  தான் வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் மணிகண்டன்  ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியுற்ற போலீஸார் தேவேந்திரனை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் கைளத்தூரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மணிகண்டன் கொலைக்கு உரிய நீதி கேட்டு இறந்த மணிகண்டனின் உடலை காவல் நிலையம் முன்பு வைத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.