சிலிண்டர் விபத்து - உயிரிழப்பு 4ஆக உயர்வு!

 
ttn

சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள பத்மநாபன் என்ற தீயணைப்பு துறை சிறப்பு அதிகாரியின்  வீட்டில் இன்று காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள் தரைமட்டமாக இடிந்தது. இந்த கோர விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர் . இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராஜலட்சுமி என்ற பெண் உயிரிழந்தார்.

ttn

இந்நிலையில் தற்போது சிலிண்டர் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.  சிலிண்டர் விபத்து ஏற்பட்ட வீட்டின் உரிமையாளர் பத்மநாபன் மற்றும் அவரது மனைவி தேவியின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து தீயணைப்பு துறையினரால்  சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.  மேலும் இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

ttn

ஐந்து வீடுகள் தரைமட்டம் ஆனதால் இந்த விபத்தில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் சந்தேகித்துள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.முன்னதாக இந்த விபத்தில் சிக்கி இருந்த பூஜா ஸ்ரீ என்ற 10 வயது சிறுமி தீயணைப்பு துறையினரால்  பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.