செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமருக்கு முதலமைச்சர் அழைப்பு!!

 
ttn

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

cm stalin

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28ஆம் தேதி  முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். பூஞ்சேரி கிராமத்தில், போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், 52,000 சதுர அடியில் சதுரங்க விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன்   நவீன உள் விளையாட்டரங்கம், ஏற்கனவே அப்பகுதியில் உள்ள 22,000 சதுர அடியிலான அரங்கத்தினை விளையாட்டரங்கமாக மேம்படுத்தும் பணி ஆகியவையும் நடைபெற்று வருகிறது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க, பிரதமர் மோடியை அடுத்த வாரம் டெல்லி சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைக்க இருந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
tn

இந்நிலையில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார். கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் தங்கி முதலமைச்சர் சிகிச்சை பெற்று வருகிறார்.  உடல் நலம் விசாரித்த பிரதமருக்கு நன்றி கூறிய முதலமைச்சர் அவரிடம் தான் நன்கு குணமடைந்து வருவதாக தெரிவித்தார்.

 

tn

மேலும் சென்னையில் வரும் ஜூலை 28ஆம் தேதி துவங்க உள்ள உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு தான்,  தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக , நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு,  கனிமொழி , விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும் , துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.