மாஜி அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரிய மனு – காவல் துறை பதிலளிக்க உத்தரவு!

 

மாஜி அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரிய மனு – காவல் துறை பதிலளிக்க உத்தரவு!

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாக நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாஜி அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரிய மனு – காவல் துறை பதிலளிக்க உத்தரவு!

இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 16ஆம் தேதியன்று தள்ளுபடி செய்தது இதையடுத்து, மணிகண்டனை கைது செய்ய காவல் துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல் துறையினர் கடந்த 20ஆம் தேதி கைது செய்தனர்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மணிகண்டனை வரும் 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மாஜி அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரிய மனு – காவல் துறை பதிலளிக்க உத்தரவு!

இந்த மனு இன்று நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் கேட்டதைடுத்து வழக்கு விசாரணை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.