மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

 
budget

நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். 

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜகவால் இந்த முறை பெரும்பான்மையை பெற முடியவில்லை. இருப்பினும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தொடர்ந்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடித்தது.   இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது.  நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக பிப்.13ஆம் தேதி வரை நடக்கிறது. 2வது பகுதி மார்ச் 10 முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகல் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.