காதலனுடன் இருந்தது போன்று தன்னுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும்! தங்கையை வன்கொடுமை செய்த அண்ணன்

 
rape

மதுரை அருகே 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை, அவரது தோழியின் சகோதரன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Delhi's civil defence personnel Sabiya was murdered not raped reveals  autopsy report | The Tatva
மதுரை மாநகர் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள  தனியார் பள்ளிக்கூடத்தில்  8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடன் பயிலும் தோழியின் வீட்டுக்கு அடிக்கடி சென்ற சிறுமி, அங்கிருக்கும் தோழியின் சகோதரரான சரவணன் (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி, கடந்த அக்டோபர் மாதம் அச்சிறுமியை சரவணன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  தொடர்ந்து சிறுமி தனியாக இருக்கும் நேரத்தில், அவரது வீட்டுக்கு சென்று, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இதனிடையே சரவணனுக்கும் சிறுமிக்கும் இடையே நடந்த இச்சம்பவம் சிறுமியின் சொந்த அண்ணனுக்கு தெரியவரவே, அச்சிறுமியை தங்கை என்றும் பார்க்காமல், சரவணனுடனான உறவு குறித்து தாயிடம் கூறிவிடுவேன் என மிரட்டி, தங்கையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இந்தநிலையில் சிறுமிக்கு உடல்நலம் குன்றியதையடுத்து, பெற்றோர் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சரவணன் மற்றும் அவரது சகோதரரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.