#BREAKING திருவள்ளூர் பள்ளி மாணவியின் உடற்கூராய்வு தொடங்கியது!

 
tn

திருவள்ளூர் பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனை தொடங்கியது.

tn

திருவள்ளூரில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் நேற்று பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதனிடையே பள்ளி நிர்வாகம் மாணவியின் மரணம் குறித்து முறையான தகவல்களை அளிக்கவில்லை என்று கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் பதற்றத்தை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டனர். 

thiruvallur 12 th student found dead in school hostel in Tamil Nadus pm start and video coverage on pm

இந்நிலையில் கீழச்சேரி பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தொடங்கியுள்ளது. உடற்கூறு ஆய்வின்போது சிபிசிஐடி அதிகாரிகளும் உடன் உள்ளனர்.  அண்ணன் சரவணன் முன்னிலையில் மாணவியின் பரிசோதனை பிரேத பரிசோதனை நடப்பதையொட்டி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட போலீசார் மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.